search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையை கட்டி மன்னிப்பு"

    வாகன சோதனையின் போது தகராறு செய்தவர் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய, கையை கட்டி எஸ்.ஐ முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    மதுரை:

    சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் நடந்த வாகன சோதனையின் போது சென்னையை சேர்ந்த ராஜராஜன் என்பவர் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என ராஜராஜன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருக்குறுங்குடி எஸ்.ஐ முன் கைகட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போலீசார் ராஜராஜன் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை எனவும் உத்தரவிட்டார். 
    ×